Monday, September 6, 2010

புலிகள் காப்பக நீர்நிலைகள் "புல்''

நீலகிரி:




                                                    
 முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை<<, புலி, மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் வசிக்கின்றன.  கடும் வறட்சியால் இந்த விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக வறட்சி நீங்கியது. கூடலூர் மற்றும் புலிகள் காப்பக சுற்றுப் பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்வதால், நீராதாரங் களில் நீர் வரத்து அதிகரித் துள்ளது. முக்கிய நீர் நிலையான மாயார் ஆற்றில் நீர் பெருகியுள்ளது. மொத் தத்தில், புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதி களில் உள்ள நீர் நிலைகளில் நீர் நிறைந்து, வழிகின்றது.  இதை தொடர்ந்து, காடுகளில் இருந்து வெளி யேறிய விலங்குகள் மீண்டும் அவற்றின் இருப் பிடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன.

No comments:

Post a Comment