Saturday, August 24, 2019

NANO LED

import RPi.GPIO as GPIO
import time
GPIO.setmode(GPIO.BCM)
GPIO.setwarnings(False)
GPIO.setup(18,GPIO.OUT)
print "LED on"
GPIO.output(18,GPIO.HIGH)
time.sleep(1)
print "LED off"
GPIO.output(18,GPIO.LOW)

Tuesday, March 1, 2011

என்றும் இளமையாக இருக்க!


       இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம் செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.

        முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

        முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும். இது நெல்லிக்கனியில் அதிகம் காணப்படுகிறது.

           மேலும் தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால் பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப் போக்கி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

        கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நடைப்பயிர்ச்சி அதன் பலன்கள்

உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி.நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும்அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

நடக்கும்போது பேசிக்கொண்டோ அரட்டை அடித்துக்கொண்டோ பாட்டு கேட்டுக் கொண்டோ நடக்கக் கூடாது. மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும்.

நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்.
· உடலில் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
· உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். வியர்வை நன்கு வெளியேறும். இதனால் உடலில் தேவையற்ற நீர்கள் வெளியேறும். உடல் வலுப்பெறும்.
· காற்றை நன்கு உள்வாங்கி வெளியிடுவதால் நுரையீரல் நன்கு செயல்பட்டு, சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சுவாசத்தை சீராக்குகிறது.
· நடப்பதால் நரம்புகள் பலமடைகிறது, மூளை புத்துணர்வு பெறுகிறது. ஞாபக சக்தி
அதிகரிக்கிறது.
· எலும்புகள், பலப்படும். தசைகள் சுருங்கி விரியும்.
· உடலில் தங்கியுள்ள அதிகமான அதாவது தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
· நல்ல உறக்கம் கிட்டும்.
· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
· முதுமையைத் தள்ளி என்றும் இளமையுடன் இருக்கச் செய்யும்.
· கை, கால் மூட்டு வலி நீங்கும்.
· செரிமான சக்தி அதிகரித்து, நன்கு பசி எடுக்கும்.
· முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.
· தினமும் 1 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது.

நடைப்பயிற்சி நமக்கு நலம் தரும் பயிற்சியாகும். ஆரோக்கியத்தை அள்ளித்தரும், பயிற்சி. தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

"தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!

 
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையின் பயன்கள்:

1) புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. குறிப்பாக கொப்பரை தேங்காய் ஆண்மையைப் பெருக்கும் .

2) தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

3) மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

4) மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

5) தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

6) தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

7) தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

8) தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

9) முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

10) இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

சிறுநீரகக் கல்லுக்கு சூப்பரான தீர்வு...



          இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு  படித்தேன். அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 ரூபாய்  செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதே இந்த பதிவின்  நோக்கம்.
        எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார். மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

        சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

        வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார். வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்(ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர்
(அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்  ) .
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):

¼ கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது) `10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை( ஒரே முறையில்  குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
       நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு ) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
     கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்...... ஆனால் வராது...... என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. எப்பூடி..? கூகுல் அம்மா ... வாழ்க.. வாழ்க...
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரை  சேமிக்கலாம்,.... ( வடை  போச்சே.... ) மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள்லாம். தினமும் 3 லிட்டெர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து  விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள்  என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன் எச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை (Grapes) : இதி உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல்  உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள  ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு  நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்  பிழிந்து, ஒரு டேபிள்  ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறுடன்  ( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிறில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். .

வாழைத் தண்டு ஜூஸ் : வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை மற்றும்  கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை இல்லையெனில் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் டாக்டரிடம்  சென்றுவிடுவதே நல்லது
டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.



இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா?



தண்ணீர் இல்லாமல் கூட சில நாள் உயிர் வாழலாம் ஆனால் தூக்கம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது.

மனிதன் அன்றாட வாழ்க்கையை திறம்பட செய்து முடிக்க தூக்கம் மிக முக்கியம் என்றால் அது மிகையாகாது.

ஒரு காலத்தில் மனிதன் தூங்கியே காலம் கழித்து கொண்டு இருந்தான் அப்பொழுது 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் தேவைப்பட்டது நமக்கு.

கால போக்கில் விலைவாசி உயர்வால் மனிதன் உழைக்க நேரிட்ட போது உறக்கம் மறந்தான் .

ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அன்றாட பணிகளை செய்து முடிக்க முழுமையான எட்டு மணி நேர இரவு உறக்கம் இன்றியமையாதது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் 8 மணி நேரம் தூங்குபவர்களின் அறிவு ஆற்றல், நினைவாற்றல் பளிச்சிடுவதாகம், எட்டு மணித்துணிகளுக்கு குறைவாக தூங்குபவர்களின் அறிவு ஆற்றல், நினைவாற்றல் நாளுக்கு நாள் மங்குவதாவும் கூறுகிறது.

பிரான்சில் உள்ள நோட்ரே டாம் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் மனிதர்களின் மறுகட்டமைப்பு நினைவு, உள் வாங்கி கொள்ளும் திறமை, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் ஆக்க சிந்தனை மற்றவர்களை விட பள்ளிசிடுவதாக தெரிவிக்கிறது.



ஆழ்ந்த உறக்கம் பெற சிறந்த 5 வழிகள் உங்களுக்காக
:

1
.  படுக்கை சொல்லும் முன்பு காபி,தேநீர் போன்றவற்றை அறவே தவிருங்கள். இதில் உள்ள காபின் என்ற வேதி பொருள் மூளை அட்ரினலின் சுரப்பதை அதிக படுத்தி தூக்கத்தை கெடுக்கிறது.

2 . ஆல்கஹால் தவிருங்கள். இது போதை தருமே தவிர நல்ல ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும். இது சில சமயங்களில் மட்டுமே பயன் தர கூடியது.

3 . தூங்கசெல்லும் சிறிது நேரம் முன்பு உங்களை தயார் படுத்த உடலையும், மனதையும் எளிதாக்கும் சில உடல் பயிற்சிகள்(stretching), யோகா, குட்டி வெந்நீர் குளியல் போன்றவை செய்யலமே.

4 . வழக்கமான அன்றாட உடல் பயற்சிகள், மாலையில் சிறிது நேரம் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகள் உலகத்தை மறந்த தூக்கத்தை உறுதியாக்கும்.

5 . முக்கியமாக உங்கள் படுக்கையை உங்களுக்கு பிடித்த மன நிலைக்கு ஏற்றது போல இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் அதாவது அமைதியாகவும், நல்ல காற்றோட்டமும், வெளிச்சம் குறைவாகவும் மற்றும் சௌகரியமாகவும் இருக்குமாறு அமையுங்கள்.

  

Tuesday, February 22, 2011

தெளிவூட்டுகிறார் திருவள்ளுவர்

தெளிவூட்டுகிறார் திருவள்ளுவர்

தெளிவூட்டுகிறார் திருவள்ளுவர்

* 
மனம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் அடக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள் உயர்ந்தவர்களால் மதிக்கப்படுவர். அடக்கவுணர்வு அற்றவர்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாவர்.
*
வரம்பு மீறி துன்பப்படுத்தினாலும் அதைப் பொறுமையோடு சகித்துக் கொள்வது சிறந்ததாகும். துன்பம் தருபவரின் செயலை மன்னித்து மறந்து விடுவது அதை விடவும் சிறந்தது.
*
பிறரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்வது நல்ல குணமாகும். அதைவிட்டுவிட்டு ஒருவர் மீது பொறாமை கொள்வது தர்மத்தைப் புறக்கணிப்பதற்குச் சமமாகும்.
*
அறத்தைக் கூட விட்டுவிட்டு அதர்மவழிகளில் செல்பவனாக இருந்தாலும் கூட, பிறரைப் பற்றி பொல்லாங்கு கூறாமல் இருக்கக் கடைபிடித்தல் வேண்டும்.
*
பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்திக் கூறுபவர்கள், தன் பிழைகளையும், குற்றங்களையும் கண்டு திருத்திக் கொள்ளப் பழகினால் உலகில் யாருக்கும் துன்பமில்லை.
*
தெளிவற்ற அறிவுள்ளவர்களே பயனில்லாத சொற்களைப் பேசுவார்கள். பயனற்ற பேச்சு ஒருவருடைய பெருமைக்கு இழுக்கை உண்டாக்கும்.
*
வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும், பிறருக்கு மகிழ்ச்சியைத் தருவதுமான இனிய சொற்களைப் பேசுவதே உயர்ந்தவர்களின் பண்பாகும்.
*
மறந்தும்கூட பிறருக்கு கேடு நினைக்காதீர்கள். அப்படி எண்ணினால் அறக்கடவுள் (தர்மதேவதை) கேடு எண்ணியவனுக்கு கேட்டினை விளைவிப்பார்

இலங்கை அரசின் சர்வாதிகார போக்கு!! திருப்பி அனுப்பபட்டார் திருமாவளவன்!


 

    


 


 


 


இலங்கை, பிப்.22:

பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்ற திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று முன்தினம் பிப்.20ம் தேதி மரணமடைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதன்படி இலங்கை சென்ற அவரை இலங்கை அதிகாரிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. வேறு வழியின்றி அவர் தான் சென்ற விமானத்திலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்.

சிந்திக்கவும்:

இறுதி சடங்குக்கு போக அனுமதி மறுத்ததன் மூலம் இலங்கை தனது பாசிச பயங்கரவாத சிந்தனையை மீண்டும் உலகுக்கு எடுத்துக் காட்டி உள்ளது. இறுதி ஊர்வலங்களில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது உலக நாடுகளில் நடைமுறையில் உள்ள ஒன்று தான். தொல். திருமாவளவனை தடுத்தான் மூலம் இலங்கை அரசு தனது சர்வாதிகார, பயங்கரவாத முகத்தை உலகிற்கு மீண்டும் அடையாளம் காட்டி உள்ளது. இலங்கையில் மக்களாட்சி நடக்கவில்லை சர்வாதிகாரி, பயங்கரவாதி அதிபராக இருக்கிறார் என்பதை இந்த நிகழ்வு தெளிவு படுத்தி உள்ளது.

Wednesday, January 26, 2011

முல்லை பெரியாறில் புதிய அணை : மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு

                     திருவனந்தபுரம் :
                                       ""முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக, புலிகள் சரணாலய வனப்பகுதியை அளிப்பது குறித்து, மத்திய அரசு நியமிக்க உள்ள மூன்று பேர் கொண்ட சுற்றுச்சூழல் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்,'' என, தேசிய புலிகள் சரணாலய கழக உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கோபால் தெரிவித்தார்.
                சபரிமலை அருகே புல்மேடு பகுதியில், 14ம் தேதி ஏற்பட்ட துயர சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியை தேசிய புலிகள் சரணாலய கழக உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கோபால் பார்வையிட்டார். பிறகு அவர், முல்லை பெரியாறு பகுதியில் கேரள அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
                   நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லை பெரியாறில் கேரள அரசு, புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக, புலிகள் சரணாலய வனப்பகுதியில் நிலம் வழங்க கோரி வருகிறது. இதுகுறித்து ஆராய மத்திய அரசு நியமிக்க உள்ள மூன்று பேர் கொண்ட சுற்றுச்சூழல் குழு, நேரில் அப்பகுதியை ஆய்வு செய்யும். அங்கு புதிய அணைக்கட்டுவதற்கு வனப் பகுதியை மாநில அரசுக்கு அளிக்கலாமா என்பது குறித்து, அக்குழு தான் முடிவு செய்யும். அதன்பின் அக்குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு ராஜேஷ் கோபால் கூறினார்.
                   தமிழக அரசு, "இங்கு புதிய அணை கட்டக் கூடாது' எனக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றுச்சூழல், அங்கு பாதுகாக்கப்படும் புலிகள், வன விலங்குகள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு போன்ற, பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு கமிட்டி அமைக்கவுள்ளது, தமிழக விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.

Thursday, January 13, 2011

பொங்கல் வைப்பது எப்படி? பொங்கல் ஸ்பெஷல்



                                                                          நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம்.

                                                           பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோலமிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திருவிளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப்பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய்ப்பல் சேர்த்து தயாரிக்கும் காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளவும். பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும். காய்ந்த விறகுகளைத் தேர்ந்தெடுங்கள். பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றவும். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியஉடன், குலவையிடுங்கள். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல்' என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி சமைக்க இருக்கிறோமோ அந்தளவுக்கு முகர்ந்து எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.

                               பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள்.பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். பின்னர், இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அவர்களின் ஆசியைப் பெற்ற பிறகு, இதன்பிறகு, குடும்பத்தார் ஒன்றாக அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். வெறுமனே "டிவி' பார்ப்பது மட்டும் பொங்கலன்று செய்யும் பணியல்ல. இப்படி, பொங்கலிட்டு பாருங்கள். சூரியதேவனின் அருள்பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.