Sunday, August 29, 2010

தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment